மும்பையில் தங்கியுள்ள விழுப்புரம் மாவட்ட கிராமத்தினர் தங்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல கோரிக்கை..

மும்பையில் தங்கியுள்ள விழுப்புரம் மாவட்ட கிராமத்தினர் தங்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல கோரிக்கை..

Update: 2020-04-04 11:44 GMT

விழுப்புரம் மாவட்டம், தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், மும்பை நகர் பந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள சந்தோஷ் நகரில் கூடாரங்கள் அமைத்து கேபிள் புதைக்கும் பணி செய்துவந்தனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், அங்கு அதிக தொற்று ஆபத்து உள்ளதாலும், தற்போது அவர்கள் உணவு மற்றும் பிற வசதிகளுக்கு தவித்து வருவதாகவும் தமிழ் தொலை காட்சி செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

இந்த விஷயத்தில், தமிழக அரசு உடனே தலையிட்டு தங்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source : புதிய தலைமுறை தொலைகாட்சி
 

 

Similar News