கொரோனா சந்தேகத்தால் முதியவரை ஒதுக்கிய கிராமத்தினர்: 5 நாட்களாக படகுக்குள் 'குவாரன்டைன்' வாழ்க்கை!
கொரோனா சந்தேகத்தால் முதியவரை ஒதுக்கிய கிராமத்தினர்: 5 நாட்களாக படகுக்குள் 'குவாரன்டைன்' வாழ்க்கை!
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன் ஹோல்டர் என்ற முதியவருக்கு 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தார். இதனால் அவருக்கு கொரோனா வந்திருக்குமோ என்ற பயத்தில் உறவினர்களும், ஊர் மக்களும் அவரை ஒதுக்கினர். இதை அடுத்து அவர் ஒரு மருத்துவரை சந்தித்தார். மருத்துவர் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள கூறினார். இதை அடுத்து முதியவர் ஊர் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு பகுதியில் உள்ள படகில் தம்மை தாமே தனிமைப்படுத்தி கொண்டு வசித்து வருகிறார்.
கொரோனா பீதியால் கிராம மக்கள் பெரும் அச்சமைடைந்துள்ளதாகவும், கிராம மக்கள் தன்னால் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களின் மனநிலையை உணர்ந்து தம்மை தாமே சுயமாக தனிமைப்படுத்தி கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாக முதியவர் குறிப்பிட்டுள்ளார்.