“நாங்கள் ஆடிப்போய் இருக்கிறோம்” - வைரலானது நடிகர் விஜய் வெளியிட்ட பதட்டமான வீடியோ!!
“நாங்கள் ஆடிப்போய் இருக்கிறோம்” - வைரலானது நடிகர் விஜய் வெளியிட்ட பதட்டமான வீடியோ!!
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே சோமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது.
இதில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்சியில் பேசிய நடிகர் விஜய், “சுபஸ்ரீ விபத்தில், யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு டிரைவரையும், பேனர் பிரிண்ட் செய்தவனையும் கைது செய்கிறார்கள். யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைக்க வேண்டும்” என்று அதிமுக அரசை கடுமையாக சாடினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக உயிரோடு இருந்தது வரை, நடிகர் விஜய், இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார்.
விஜயின் தலைவா பட வெளியீட்டில் பிரச்சினை ஏற்பட்ட போது அவர் கைகெட்டி நின்று, தழுதழுத்த குரலில் பேசி வெளியிட்ட வீடியோவே மிகப்பெரிய சாட்சியாகும்.
அந்த வீடியோவில் நடிகர் விஜய் கூறியிருப்பதவாது:-
எல்லோருக்கும் வணக்கம்!
தலைவா திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால், தமிழகத்தில் ரிலீஸ் ஆகவில்லை. சரியாக, ரிலீசுக்க 2 நாட்களுக்கு முன்னால், சில அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து சில கடிதங்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு சில மிரட்டல்கள் வந்தன. இந்த படத்தை ரிலீஸ் செய்தால் சில பிரச்சினைகள் வரும் என்று குறிப்பிடப்பட்டது.
எனவே யோசிந்துதான் ரிலீஸ் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். அதனால் கொஞ்சம் தாமதம்.
தமிழ் சினிமா உலகமே ஆடி போய்தான் இருக்கிறோம். நாங்கள் இப்போது திருச்சியில் இருக்கிறோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்திக்க வேண்டும் என்று ஒரு அப்பாய்ன்மெண்ட் கேட்டிருக்கிறோம். அவர்கள் விரைவில் எங்களை சந்திக்க அனுமதிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
அம்மா அவர்கள் தமிழகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள். தமிழகத்தையே ஒரு முதல் மாநிலமாக கொண்டு வரவேண்டும் என்பதற்காக உழைத்து வருகிறார்கள்.