வங்காளதேச டி20 போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு!!

வங்காளதேச டி20 போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு!!

Update: 2019-10-21 06:27 GMT

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலிக்கு வங்காளதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்துள்ளார்.


இந்தியா அணி கேப்டன் விராட் கோலி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஓய்வு பெறாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா தொடர், ஐபிஎல், உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்கா தொடர் என ஓய்வு பெறாமல் விளையாடி வருகிறார்.


இதனால் அவர் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வருகின்றன.
வங்காளதேச போட்டிக்கான இந்தியா அணி வீரர்கள் தேர்வு வருகின்ற 24-ந்தேதி நடக்கிறது.


Similar News