பாஜக 300 தொகுதிகளைக் கைப்பற்றும்: மே.வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது: ஐஏஎன்எஸ்-சிவோட்டர் 2 கருத்து கணிப்பு தகவல்கள்.!
பாஜக 300 தொகுதிகளைக் கைப்பற்றும்: மே.வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது: ஐஏஎன்எஸ்-சிவோட்டர் 2 கருத்து கணிப்பு தகவல்கள்.!
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 34, பாஜக 8 இடங்களைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் ஓரிடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றும் நேற்று வெளியிடப்பட்ட ஐஏஎன்எஸ்-சிவோட்டர் 2 வது கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஐஏஎன்எஸ்-சிவோட்டர் இணைந்து நடத்திய முதல்கட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் கடந்த 10-ம் தேதி வெளி யிடப்பட்டன. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 264, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 141 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதே ஐஏஎன்எஸ்-சிவோட்டர் கூட்டணி இரண்டாம் கட்டமாக கருத்துக் கணிப்பு நடத்தி கடந்த 24-ம் தேதி முடிவுகளை வெளியிட்டது. இதில் பாஜக கூட்டணி 300 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான முழுமையான விவரங்கள் வருமாறு:
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 42 சதவீத வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 30.4 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.
உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 28, சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி 48, காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி பெறும். பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 36, காங்கிரஸ் கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கும். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக கூட்டணி 34, காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களைக் கைப்பற்றும்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 34, பாஜக 8 இடங்களைக் கைப் பற்றும். காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக் கும் ஓரிடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் பாஜக 23, காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெறும்.