சர்ச்சுகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை! தான் ஒரு கிறிஸ்துவர் என்று ஒப்புக்கொண்ட பா.ரஞ்சித் போராடாதது ஏன்?
சர்ச்சுகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை! தான் ஒரு கிறிஸ்துவர் என்று ஒப்புக்கொண்ட பா.ரஞ்சித் போராடாதது ஏன்?
கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்று சொல்லித்தான் ஆதி திராவிட மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினர்கள். ஆனால் அந்த கிறிஸ்தவ மதத்தில், உலகம் முழுவதும் 33,830 சாதிகள் உள்ளன. நமது நாட்டிலும் கிறிஸ்தவர்கள், ஜாதி அடிப்படையில்தான் செயல்படுகின்றனர். அதிலும் குறிப்பாக ஆதி திராவிட மக்கள், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிறகு மிகப்பெரிய தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.
உடையார்கள் அதிகமாக உள்ள கிராமத்தில் ஒரு தலித் பாதிரியாராக இருக்க முடியாது. அதையும் மீறி ஒரு தலித் பாதிரியார் இருந்துவிட்டால், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் உடையார் சாதியை சேர்ந்த பாதிரியாரை அழைத்து வந்தே நடத்துகின்றனர். இது போலத்தான் மற்ற உயர் ஜாதி கிறிஸ்தவர்கள் உள்ள கிராமங்களில் தலித் பாதியார்களின் நிலைமை கீழ்தரமாக உள்ளது.
வேளாங்கண்ணி போன்ற புகழ்பெற்ற சர்ச்சுகளில் ஒரு தலித்தை பாதிரியாராக நியமிக்கவே முடியாத காரியம். இங்கு இதுவரை ஒரு தலித் பாதிரியாரை நியமித்ததே இல்லை என்கின்றனர். இதைவிடக் கொடுமை, வேளாங்கண்ணி சர்ச் விழாவின் போது தலித்துகளுக்கு என்று தனியாக ஒருநாள் ஒதுக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாள் விழாவில்தான் தலித் கலந்துகொண்டு கொண்டாட முடியும் என்பதும் வேதனை தான்.
அனைத்து சர்ச்சிகளிலும் உயர் ஜாதி கிறிஸ்தவர்களின் சவ வண்டியில் ஒரு தலித் கிறிஸ்தவரின் சடலத்தை அனுமதிப்பதில்லை. எல்லா சர்ச்சுகளிலும் தலித்துகளுக்கு தனி சவ வண்டியைத்தான் வைத்து உள்ளனர். தலித்துகளை புதைப்பதற்குகூட தனி இடம்தான் ஒதுக்கி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் போன்ற பல மாவட்டங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு தனியாக “இரட்சன்ய சேனை” என்ற சர்ச்சுகள் நடத்தப்படுகின்றன. இந்த சர்ச்சுகளில் மற்ற உயர் ஜாதி கிறிஸ்தவர்கள் நுழைவதே இல்லை. அந்த சர்ச்களை ஒதுக்கியே வைத்துள்ளனர். அதுபோல அங்குள்ள கத்தோலிக்க சர்ச்சுகள், சிஎஸ்ஐ சர்ச்சுகளில் தலித்துகளுக்கு இடமில்லை.
இப்படி மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள், அனுபவித்து வரும் தீண்டாமை கொடுமைகளுக்கு அளவே இல்லை. இதைத்தான், கிறிஸ்தவராக இருந்த திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தும் இன்றளவும் அனுபவித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. தான் ஒரு கிறிஸ்தவராக இருந்ததை ஒன் இந்தியா தமிழ் நேர்காணலில் ரஞ்சித் கூறியுள்ளார்.