திமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாகும். கட்சியில் சீட் கேட்டு நெருக்கடி உள்ளது. கூட்டணி நலனையும் கட்சி நலனையும் கவனித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.
திமுக கூட்டணியில் 10 தொகுதிகளுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்று தெரிகிறது. இதனால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிரமம் உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணிக்கு வலுவான சக்தியாக உள்ளது. அவர்கள் நல்ல முடிவெடுப்பார்கள் என்று நம்புவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சசிகலா - ராமதாஸ் தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் திருமாவளவன்.