காங்கிரஸ் கட்சிக்குள் சூடான சர்ச்சை!! தனிக்கட்சி யோசனை!!
காங்கிரஸ் கட்சிக்குள் சூடான சர்ச்சை எழுந்துள்ளது. தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம், தனிக்கட்சியாக நிற்கலாம் என்று மூத்த நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை விடுத்தார்.
தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்பு மனநிலையிலும், ஆதரவாகவும் உள்ளனர். பிப்ரவரி 22-ம் தேதி தி.மு.க குழு அமைத்த பிறகு பேச்சு நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது. த.வெ.க-வுடன் பேச்சு நடத்த சில நிர்வாகிகள் முயற்சி செய்தனர்.
ப.சிதம்பரம் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு இல்லை. ராகுலிடம் விளக்கியும் ரியாக்ஷன் இல்லை. விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் த.வெ.க-வுடன் கூட்டணி வைப்பேன் என தனது நண்பர்களிடம் சொல்லியுள்ளார்.
கார்த்திக் சிதம்பரம் தனிக்கட்சி ஆலோசனை நடத்தினார். 25 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க முடியாது என தி.மு.க தரப்பில் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.