2 பெரிய கட்சிகளும் ஊழல் செய்துள்ளது.. வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி.!

2 பெரிய கட்சிகளும் ஊழல் செய்துள்ளது.. வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி.!

Update: 2020-12-11 16:40 GMT

தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் ஊழலில் திளைத்திருப்பது அவர்கள் பேசுவதில் இருந்தே தெரிவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனவாசன் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: பல்வேறு சிறப்புகள் தமிழகத்தில் இருந்தாலும், ஊழலில் திளைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் மாறி மாறி யார் ஊழல் செய்தார்கள் என்று வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருவதை பார்க்கும்போது, மக்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே விவாதிக்கிறார்கள் என்றுதான் பாஜக நினைக்கிறது என கூறினார்.

Similar News