கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை திசை திருப்பியது தி.மு.க தான்.. இந்து முன்னணி குற்றச்சாட்டு..

Update: 2024-04-15 02:24 GMT

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை மக்களிடம் இருந்து திசை திருப்புவது திமுக தான் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். மேலும் இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பற்றி அவர் மேலும் கூறும் பொழுது, "பாஜக போன்ற கட்சிகளை கோவையில் அனுமதித்து இருந்தால் அமைதி இருக்காது.


தொழில் வளம் பெருக்காது, வளர்ச்சி குறைந்திடும் என்று தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார். ஆனால் உண்மையில் திமுக ஆட்சியில் தான் குண்டு வெடிப்பு நடந்து இருக்கிறது. எப்படி திமுக ஆட்சியில் குண்டு வெடிப்பு நடந்தது? எதனால் நடந்தது? என்பதை மக்களுக்கு தெரியாமல் திசை திருப்ப, தி.மு.க என்னவெல்லாம் நாடகம் நடத்தியது என்பதை நினைவுபடுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் எப்படி நடந்து கொண்டார்கள்? என்பதை உணர்ந்து அதற்கு தக்க பதிலடி நாங்கள் தருவோம். அதற்கு வாக்கு ஒரு ஆயுதம். அதை தவறாது தமிழக மக்கள் பயன்படுத்தியிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுகிறேன்" என்று அவர் தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News