அடிப்படை வசதி கூட செய்ய முடியாமல் இருக்கும் மாடல் ஆட்சி? அண்ணாமலை கண்டனம்..

Update: 2024-04-09 14:55 GMT

சமூக வலைத்தளங்களில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், "அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியாமல் இருக்கும் மாடல் ஆட்சி எந்த மாதிரியான மாடல்? என்பதை முதல்வர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்" என்று தன்னுடைய கண்டன பதிவை தெரிவித்து இருக்கிறார். லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது இதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாவட்டத்தில் நடக்கும் வீடியோவை பதிவிட்டு அது தொடர்பான கேள்வி ஒன்றையும் எழுப்பி இருக்கிறார்.


இது குறித்து எக்ஸ் சமூகவலை தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிப் பெண் ஒருவரை, துணியால் டோலி கட்டி, மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் காணொளி ஒன்றை, சமூக வலைத்தளத்தில் காண நேர்ந்தது அதிர்ச்சியை அளிக்கிறது.


மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அந்தத் திட்டங்களை ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்திக் கொள்கிறாரே தவிர, அவற்றை நிறைவேற்ற முயற்சிப்பது கிடையாது. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்" என கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News