80 சதவிகிதம் முடிந்த பண்டேல்கண்ட் விரைவுச்சாலை - யோகியின் முத்திரை பதிக்கும் திட்டங்கள்

Update: 2022-02-25 13:15 GMT

உத்திரபிரதேசத்தில் 296 கிலோ மீட்டர் நீளமுள்ள பண்டேல்கண்ட் விரைவுச்சாலை 88 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது மீதமுள்ள கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.


உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் பண்டேல்கண்ட் பகுதியில் குறிப்பாக சித்ரகூட், பண்டா, ஹமீர்பூர் போன்ற வளர்ச்சி அடையாத மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்த இந்த விரைவு சாலையை முன்னெடுத்து சிறப்பாக வேலைகளை செய்து வருகிறது. இந்த விரைவு சாலை நான்கு வழிச்சாலையாக ஆறு பாதைகள் வரை விரிவாக்கக்கூடிய கட்டமைப்புடன் இருக்கும்.


விரைவுச் சாலையில் ஒரு பக்கத்தில் 3.75 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் இதனால் திட்ட பகுதியின் அருகில் உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் போக்குவரத்து வசதியை பெறலாம் கட்டுமானச் செலவு 7,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


விரைவுச் சாலையில் கட்டுமானத்துடன் பகுதியானது ஆக்ரா-லக்னோ விரைவு சாலை மற்றும் யமுனா விரைவுச்சாலை ஆகியவற்றுடன் வேகமான மற்றும் சுமுகமான போக்குவரத்து வழித்தட நினைக்கப்படும் இதனால் தேசிய தலைநகர் டெல்லி மண்டலத்துடன் இந்த சாலை இணையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னெடுத்த வளர்ச்சிக்கான திட்டங்களை இது முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.


Source - Swarajya

Similar News