சபரிமலை அமைந்துள்ள பந்தலம் நகராட்சியை ஆளப்போகும் பா.ஜ.க., வீரமங்கைகள்.!

சபரிமலை அமைந்துள்ள பந்தலம் நகராட்சியை ஆளப்போகும் பா.ஜ.க., வீரமங்கைகள்.!

Update: 2020-12-28 17:04 GMT

கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க., பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி பல இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

அதில் ஒன்று சபரிமலை கோவில் அமைந்துள்ள பந்தளம் நகராட்சியை முதன் முறையாக பா.ஜ.க., கைப்பற்றியுள்ளது. கடந்த வாரம் நடந்த முடிந்த தேர்தல் முடிவில் 33-ல் 18 வார்டுகளை அபாரமாக வென்றது. இதனை தொடர்ந்து நகராட்சியில் யார் தலைவராக பொறுப்பேற்பார்கள் என பா.ஜ.க., நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை முடிவில் இரண்டு பெண்களுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்தது. அதில் நகராட்சி தலைவராக சுசீலா சந்தோசும், துணைத்தலைவராக ரம்யாவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நகராட்சி பெண்களுக்கு என்று ஒதுக்கப்படவில்லை. ஆனாலும் இப்பதவிகளில் பெண்களை அமரவைத்து பா.ஜ.க., அழகு பார்க்கிறது. இது போன்ற #WomenEmpowerment தான் இன்றைய அரசியலில் தேவை. பந்தளத்தை ஆளப்போகும் பா.ஜ.க வீர மங்கைகளுக்கு அனைத்து கட்சி பெண்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர்கள் தற்போது சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News