மும்பைக்கு சென்று சிவசேனா எம்.பி.க்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்.!

மும்பைக்கு சென்று சிவசேனா எம்.பி.க்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்.!

Update: 2020-12-02 19:17 GMT

உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றுள்ளார். முதல் நாள் நிகழ்ச்சியில், பிலிம் சிட்டி அமைப்பதற்கான லட்சிய திட்டத்தை அவர் வெளியிட்டார். இதன் பின்னர் திரைப்பட பிரபலங்களையும், தொழில் அதிபர்களையும் சந்தித்து பேசினார்.

இது பற்றி சிவசேனா கட்சியின் எம்.பி., சஞ்சய் ராவத் பேசியதாவது: மும்பையில் இருந்து பிலிம் சிட்டியை மற்ற இடத்திற்கு மாற்றுவது எளிதானது அல்ல. தென்இந்தியாவில் பிலிம் சிட்டி எப்போதுமே மிகப்பெரியது. மேற்கு வங்காளம், பஞ்சாபிலும் பிலிம் சிட்டி உள்ளது. யோகி ஜி அங்கே செல்வாரா?. டைரக்டர், நடிகர்களுடன் பேசுவாரா? அல்லது மும்பையில் மட்டுமே இதை செய்வாரா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மும்பையிலேயே பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஆதித்யநாத், நாங்கள் எதையும் எடுத்துச் செல்வதற்காக இங்கே வரவில்லை. நாங்கள் புதியதாக பிலிம் சிட்டி உருவாக்கி வருகிறோம். அது பற்றி ஏன் நீங்கள் கவலைப்பட வேண்டும்? உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை மக்களுக்காக புதிதாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


மற்றொரு மாநிலத்தில் இருந்து வந்து கெத்தாக மும்பையில் சிவசேனாவிற்கு பதலடி கொடுப்பது உபி முதலமைச்சருக்கு எப்போதுமே கை வந்த கலை என்று மகாராஷ்டிரா மாநில பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Similar News