தி.மு.க எம்.பி திமிர் பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானம் செய்த உதயநிதி ஸ்டாலின்!

தி.மு.க எம்.பி திமிர் பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானம் செய்த உதயநிதி ஸ்டாலின்!

Update: 2020-10-23 19:04 GMT

மத்திய அரசாங்கத்தின் பிராந்திய மொழி திரைப்படங்களுக்கான விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதற்கு தமிழகத்தில் இருந்து நடிகர் பார்த்திபன் தயாரித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கு திரைப்பட துறையினர் அனைவரும் பார்த்திபன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். ஆனால், தி.மு.க தர்மபுரி எம்.பி செந்தில் குமாரோ "அண்ணனுக்கு பாஜக ல ஒரு சீட் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்" என சீண்டி ட்வீட் செய்து இருந்தார்.


இதற்கு திரைத்துறையினர் உட்பட அனைவரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் செந்தில் குமாரின் திமிர் பேச்சுக்கு சாட்டையடி பதிலை அளித்துள்ளார் நடிகர் பார்த்திபன். அதில் "உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்!" என்று தெரிவித்துள்ளார்.

Full View

 இதைதொடர்ந்து "உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன்" என்றும் அந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். உதயநிதி தரப்பில் இருந்து செந்தில் குமாருக்கு பலத்த அர்ச்சணை கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar News