ஏழை ஹிந்து தலித்துகளை ஏமாற்ற வீட்டில் சனாதனம்: திமுக, சிறுபான்மையினரை ஐஸ் வைக்க ஹிந்து வெறுப்பு.!
ஏழை ஹிந்து தலித்துகளை ஏமாற்ற வீட்டில் சனாதனம்: திமுக, சிறுபான்மையினரை ஐஸ் வைக்க ஹிந்து வெறுப்பு.!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நாளுக்கு நாள் ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருவதாகவும், சமீபத்தில் அவர் ஹிந்து மதத்தை காரணமாகக் கூறி ஹிந்து பெண்கள் அனைவரையும் ஆபாச வார்த்தைகளால் குறிப்பிட்டுள்ளதாகவும் பாஜக மூத்த நிர்வாகியும் , வழக்கறிஞருமான திரு.அஸ்வத்தாமன்., திருமாவளவன் மற்றும் பெரியார் you tube channel ஐ நிர்வகிப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 11 பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில் உயதநிதி ஸ்டாலின், பிரசன்னாவை, தொடர்ந்து திருமாவவளவனும் ஹிந்துக்களின் உணர்வுகளை ஆபாசமாக வருணித்து தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார் என்றும், கறுப்பர் கூட்டத்தின் பின்னால் எப்படி திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இருந்தது போல் திருமாவளவன் பின்னால் திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது உள்ளார் என்றும் ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றன.
குறிப்பாக பாஜக திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் திருமாவளவனை மிக மோசமாக சித்தரித்து டுவிட்டரில் பரப்பப்படும் ஹேஷ்டேக் மேலும், மேலும் டிரெண்ட் ஆகிவருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் திருமாவளவனை பலரும் படுமோசமாக விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசியது தவறு என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். அவர் மேலும் கூறுகையில் " விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தியது சரியா? அவர் பேசியது மிகவும் தவறு.
கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்? பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக இதுபற்றி வாய் திறக்காதது ஏன்? கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியதை திமுக, காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.