அடி மேல் அடி.! சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம்.!
அடி மேல் அடி.! சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம்.!
பினராய் விஜயனின் கம்யூனிஸ்ட் LDF ஆட்சி, கேரளாவில் மொத்த குழப்பத்தின் ஒரு வடிவமாக உள்ளது. முதலில் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் ஐஏஎஸ் ஐ பல புலனாய்வு அமைப்புகளான NIA, ED விசாரித்து வருகின்றன. அவரது கூட்டாளியான சுவப்னா சுரேஷுக்கும் முதல்வரின் அதிகாரபூர்வமான இல்லத்திற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.
பல மாதங்களாக பினராய் விஜயன் தனக்கு சுவப்னாவைத் தெரியாது தெரியாது என்றே கூறிவந்தார். பிறகு அவரை அந்த 'சர்ச்சைக்குரிய பெண்மணி' என்று குறிப்பிட்டார். பிறகு தன்னுடன் சேர்ந்து அவர் UAE கவுன்சில் ஜெனரல் ஐ பார்க்க சென்றதாக கூறினார்.
முதன்மைச் செயலாளர் சிவசங்கர், முதல்வர்தான் தன்னை ஸ்வப்னாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக கூறியபோது, கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறி அவ்வப்போது நிபந்தனையுடன் மற்றும் பாதியாக உண்மைகளை ஒப்புக் கொள்ள நேரிட்டது. பிறகு, சிவசங்கரை சுவப்னாவுக்கு UAE மிசன் தலைவர் உடன் பயணித்த போது அறிமுகம் செய்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் அது தனக்கு நினைவில்லை, சிவசங்கர் தன்னுடைய வீட்டிற்கு வந்த போது கவுன்சில் ஜெனரல் மற்றும் ஸ்வப்னா அங்கு இருந்ததோ கூட தனக்கு அந்த அளவுக்கு தெளிவாக தெரியவில்லை என்று கூறினார்.
இதற்குப் பிறகு மிகவும் அவமானகரமான கைதான, கொடியேறி பாலகிருஷ்ணன் மகனான பினிஷ் கொடியேறியின் கைது வந்தது. கொடியேறி பாலகிருஷ்ணன் கேரளா சிபிஎம்மின் மிகவும் சக்திவாய்ந்த மாநிலச் செயலாளர் செயலாளர் ஆவார். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பினராய் விஜயனின் வலதுகை போன்றவர்.
அவரின் மகனை சில வாரங்களுக்கு முன்பு, அமலாக்கத்துறை பண மோசடி நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்தது. சர்ச்சைக்குரிய சில தொழிலதிபர்கள் உடன் அவர் சேர்ந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பினீஷின் பினாமிகள் என்று கூறப்படுகிறது. பின்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வந்தன. அவர் வசித்து வந்த வசதியான வாழ்க்கை குறித்தும் மற்றும் வங்கி கணக்குகள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.