இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றி இருக்க முடியும்! நரம்பில்லா நாக்கில் வரம்பின்றி பேசும் திருமாவளவன்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றி இருக்க முடியும்! நரம்பில்லா நாக்கில் வரம்பின்றி பேசும் திருமாவளவன்!

Update: 2020-12-27 07:30 GMT

ஏற்கனவே ஹிந்து பெண்களை இழிவுப்படுத்தி பேசி சர்ச்சையை உருவாக்கிய திருமாவளவன், தற்போது மீண்டும் ஹிந்து மக்களின் மனதை புண்புடுத்தி உள்ளார். சிதம்பரம் லோக்சபா தொகுதியில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. தொகுதி மக்கள் கேட்கிற கேள்விக்கு பதில் கூற முடியாமல் அதை திசை திருப்பும் முயற்சியில் ஹிந்து மதத்தை பற்றி தேவையில்லாமல் விமர்சித்துள்ளார்.

'கிருஷ்ண பகவான் தான் ஹிந்து மதத்தில் ஜாதிகளை ஏற்படுத்தினார்' என திருமாவளவன் பேசியது ஹிந்து அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

பிரியாணிக்காக, இஸ்லாமிய கூட்டங்களில் பங்கேற்பதாக தம்மை விமர்சனம் செய்வதா ? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை - மண்ணடியில் நடைபெற்ற ' சமூக விடுதலையை நோக்கி ' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி 21 ஆண்டுகள் ஆவதாக தெரிவித்தார்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்து மதம் ஏன் உலகில் எங்கும் பரவவில்லை? என கேள்வி எழுப்பிய அவர், இஸ்லாமியர்கள் நினைத்திருந்தால் இந்தியாவை, இஸ்லாமிய நாடாக மாற்றி இருக்க முடியும் என்றார்.

சமீப காலமாக ஹிந்து மதத்தினுடைய நம்பிக்கைகளை கோவில்களை புனித நுால்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வாடிக்கையாக திருமாவளவன் வைத்துள்ளார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான உறவு, சமத்துவ தேடலில் இருந்து பிறந்த உறவு என திருமாவளவன் தெரிவித்தார்.

Similar News