ஆர்வகோளாறு.. குழிக்குள் குதிக்க பார்த்த தி.மு.க., பொருளாளர் துரைமுருகன்.? அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்.!

ஆர்வகோளாறு.. குழிக்குள் குதிக்க பார்த்த தி.மு.க., பொருளாளர் துரைமுருகன்.? அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்.!

Update: 2020-12-25 19:46 GMT

வேலூர் அருகே பொண்ணை ஆறு பகுதியில் வெள்ளச் சேதத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பார்வையிட்டபோது குழிக்குள் தவறி விழுந்து விடுவாரோ என்று தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் புயல் ஏற்பட்டது. அப்போது பாலாற்றின் துறை ஆறான பொண்ணை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்பாடி அருகே கடந்த 17ம் தேதி பாலம் ஒன்றும் சேதமடைந்தது. பாலத்தின் இருபுறமும் தடுப்பு வைத்து வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு பாலத்தை சரி செய்யும் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த பணிகளை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் எம்.பி., கதிரவன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். கதிரவன் ஏணி வழியாக இறங்கி கீழே சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் தானும் இறங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பாலத்தின் முனையில் நின்று எட்டிபார்க்க துரைமுருகன் முயன்றார். அப்போது குழிக்குள் தவறி விழுந்து விடுவாரோ என்று நிர்வாகிகள் அவரது கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டனர்.

அப்போது சரியாக பணிகள் நடைபெறுவது தெரியாத காரணத்தால், மீண்டும் முனைப்பகுதியை எட்டி பார்த்துள்ளார். அப்போதுதான் அவருக்கு நிம்மதியாக இருந்துள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர். 

ஒரு விதத்தில் திமுகவினர் சந்தோஷப்பட்டாலும், எங்கே பொருளாளர் குழிக்குள் விழுந்து விடுவாரோ என்ற அச்சத்தில் இருந்ததையும் காணமுடிகிறது. எது எப்படியோ திமுகவில் ஒரு நல்லவர் இருக்கிறாரோ என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி சென்ற வண்ணம் இருந்தனர்.
 

Similar News