ஸ்டாலின் அவதூறு வழக்கில் ஆஜரான திமுக வக்கீல்.. தமிழக அரசை பாராட்டி தள்ளிய நீதிபதி.!

ஸ்டாலின் அவதூறு வழக்கில் ஆஜரான திமுக வக்கீல்.. தமிழக அரசை பாராட்டி தள்ளிய நீதிபதி.!

Update: 2020-12-10 19:22 GMT

புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏரி, குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளை திறந்து விட்டு ஆபத்தில் இருந்து மக்களை காப்பாற்றியது.

இந்நிலையில், அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் எதிர்கட்சியினர் மத்தியில் இருந்தும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வெள்ள காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

கடந்த முறை பெரும் வெள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு பெய்த பெருமழையிலும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிய நிலையிலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக சிறந்த முறையில் செயல்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு மழையின் போது நீர் நிலைகள் முழுமையாக நிரம்பிய போதும் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசனும் பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

Similar News