மின்கட்டணத்தை குறைக்க போராடியவர்களை கொன்று குவித்த திமுக ஆட்சி.. பிச்சைக்காரர்களின் போராட்டம் என்று பேசிய கருணாநிதி.!
மின்கட்டணத்தை குறைக்க போராடியவர்களை கொன்று குவித்த திமுக ஆட்சி.. பிச்சைக்காரர்களின் போராட்டம் என்று பேசிய கருணாநிதி.!
கடந்த 1970ம் ஆண்டு திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை எதிர்த்து போராடிய விவசாயிகளை ஈவு இரக்கமின்றி திமுக அரசு சுட்டுக்கொன்றது. அப்போது முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். விவசாயிகளுக்காக அன்று முதல் இன்று வரை துரோகம் இழைத்து வருகிறது.
முல்லைப்பெரியாறு, காவிரி ஆணையம் என பல பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம். டெல்டா விவசாய நிலத்தில் மீத்தேன் எடுக்க திமுக ஆட்சி அனுமதி அளித்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்நிலையில், கடந்த 1970ம் ஆண்டு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக திமுக அரசு உயர்த்தியதை எதிர்த்து தமிழக விவசாயிகள் போராடினார்கள்.
1970 மே 9 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் என்று பல ஆயிரம் கணக்கில் பெரும் பேரணியாக நடந்து, கட்டை வண்டிப் போராட்டம் என்று கோவை நகரையும் மற்ற தமிழக நகரங்களையும் திக்குமுக்காடச் செய்தனர் அன்றைய விவசாயிகள். இந்த போராட்டத்தால் நகரங்கள் அனைத்தும் அதிர்ந்து போனது.
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறாவிட்டால், ஜூன் 15ம் தேதி அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19-ம் தேதி முழு அடைப்பும் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர். போராட்டத்தின் உச்சத்தில் இருந்த கருணாநிதி அரசு போலீசாரை கொண்டு துப்பாக்கியால் விவசாயிகளை சுட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமிகவுண்டர், மாரப்பகவுண்டர், ஆயிக்கவுண்டர் உள்ளிட்ட விவசாயிகள் தனது இன்னுயிரை நீத்தனர்.
இதற்கு முழு காரணமும் கருணாநிதித்தான் என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். இந்த இறப்புக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி விவசாயிகளின் மரணத்தை பத்திரிகையாளரிடம் கொச்சைப்படுத்தி பேசியிருந்தார். துப்பகியிலிருந்து தோட்டா வராமல் மலர்களா வரும் என்று பேட்டி கொடுத்தார். மேலும் பிச்சைக்காரர்களின் போராட்டம் என கூறியிருந்தார். இன்று உள்ள பல இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
விவசாயிகளின் மரணத்தை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் உச்சநிலைக்கு சென்றது. இதனால் செய்வதறியாமல் யூனிட்டுக்கு 1 பைசா மின்கட்டணத்தை குறைத்தார் கருணாநிதி. காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே மாநில அரசு மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 01.01.1972 முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்த உத்தரவிட்டது.