மத்திய அரசை எதற்கு ஆதரிக்கிறோம் தெரியுமா.? அ.தி.மு.க., கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்.!

மத்திய அரசை எதற்கு ஆதரிக்கிறோம் தெரியுமா.? அ.தி.மு.க., கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்.!

Update: 2020-12-27 15:13 GMT

தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதால் மத்திய அரசை ஆதரிக்கிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் அதிமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், ‘‘அதிமுகவில் சாதாரண தொண்டராக இருப்பது கூட பெருமைதான். எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. 

தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதால் தான் மத்திய அரசை ஆதரிக்கிறோம். தமிழகத்திற்கு நலத்திட்டங்களை பெறும் நோக்கத்திற்காகவே மத்திய அரசை ஆதரிக்கிறோம். மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்காதபோதும் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று தந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News