‘‘தொண்டையில் இறங்கும் ஒவ்வொரு சொட்டுகுடிநீரையும் நன்றியுடன் குடிக்க வேண்டும்’’.. மிரட்டும் கேரளா மாடல்.!
‘‘தொண்டையில் இறங்கும் ஒவ்வொரு சொட்டுகுடிநீரையும் நன்றியுடன் குடிக்க வேண்டும்’’.. மிரட்டும் கேரளா மாடல்.!
கேரள மாநிலம் ஹரிபாத் பகுதியில் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.கிருஷ்ண குமார் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரின் பேச்சு, மலையாளிகளை மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆழப்புலாவில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், தனக்கு வாக்களித்து கவுன்சிலராகத் தேர்ந்தெடுத்த 375 வாக்காளர்களுக்கு மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளுக்கு தான் பணியாற்ற உள்ளதாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"மற்றவர்கள் என்னிடம் உதவி கோரி வர வேண்டாம். சொல்லப்போனால் உங்களில் சிலர் உதவி கேட்டு வந்தால் இரண்டாம் தர, மூன்றாம் தர குடிமக்களாகத் தான் நடத்துவேன்." என்று தனக்கு வாக்களிக்காதவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார். இவ்வாறு பேசியது பா.ஜ.கவுக்கு வாக்களித்தவர்கள் மீது உள்ள கோபம் மற்றும் வெறுப்பால் தான் என்று கூறப்படுகிறது.
Loading tweet...
I was forced to add subtitle to this video for entire Indians to see (since it’s in malayalam). I know no Indian media will pick this up. Especially Lutyean left leaned rags. 😎
— Venkatesh Krishnamoorthi🕵️♂️ (@venkyuvacha) December 18, 2020
Haripad ward councillor S. Krishnakumar of CPI(M) tells this quite openly after winning the seat. pic.twitter.com/MwLvRoPRAb
இன்னும் ஒரு படி மேலே போய், "உங்களது தொண்டை வழியாக கீழிறங்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் 'ஹரே கிருஷ்ணகுமார்' என்று உச்சரிக்க வேண்டும் 'ஹரே ரமா' என்று அல்ல." என்று அவர் பேசியது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.