பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கட்சி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.!

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கட்சி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.!

Update: 2020-12-03 13:41 GMT

சென்னையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம் மற்றும் அக்கட்சியின் தலைவர்கள் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


மேலும், சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைமையகம் மற்றும் முன்னாள் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில் வீடு ஆகியவற்றில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


மேலும், திருவல்லிக்கேணியில் உள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் யா முகைதீன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை முடிவில் பல ஆவணங்கள் கிடைக்கப்பெறும் என்றும் உயர் அதிகாரிகள் கூறி வருகின்றனர். 


இந்தியாவில் இந்த அமைப்புகளுக்கு பல கோடிக்கணக்கான பணம் கிடைக்கிறது. இவை எங்கிருந்து வருகிறது. இவர்களுக்கு பின்புலம் யார் என்பன பற்றியும் அமலாக்கத்துறை விசாரிக்க வாய்ப்புள்ளது.
 

Similar News