"காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கியது தப்பு" ஆர்.எஸ்.பாரதி : காங்கிரசை ஓரம் கட்டுகிறதா தி.மு.க.?

"காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கியது தப்பு" ஆர்.எஸ்.பாரதி : காங்கிரசை ஓரம் கட்டுகிறதா தி.மு.க.?

Update: 2021-01-24 09:36 GMT

"ஜெயக்குமார் இன்று அமைச்சராக இருக்கிறார் என்றால் அது அவருக்கு திமுக போட்ட பிச்சை, மேலும் காங்கிரஸ்'க்கு தொகுதி ஒதுக்கியது தப்பு" எனவும் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரைமுறை இன்றி பேசியிருக்கிறார்.

சென்னை ராயபுரம் பழைய ஆடுதொட்டி சாலையில் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதி செய்து தராத அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்துகொண்டு பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது, "ஜெயக்குமார் இன்று அமைச்சராக இருக்கிறார் என்றால் அது அவருக்கு தி.மு.க போட்ட பிச்சை. அவரது தந்தையை கவுன்சிலராக உருவாக்கியது தி.மு.க தான். அதனை மறந்து அவர் பேசக்கூடாது" என பேசினார்.

மேலும் பேசிய அவர், "ராயபுரம் தொகுதியில் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க மிகப்பெரிய தவறு செய்து விட்டது, அதை காங்கிரசுக்கு கொடுத்ததால்தான் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டு முறை வெற்றி பெற்றார்" என கூறியுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் தி.மு.க இடையிலான உரசல்கள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் காங்கிரசுக்கு தொகுதி கொடுத்தது தப்பு என தி.மு.க அமைப்பு செயலாளர் பாரதி பேசியிருப்பது சலசலப்பை எற்படுத்தியுள்ளது.

Similar News