லட்சக்ணக்கில் இறந்த பின்னர் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி.. நல்ல திட்டத்தை தடுக்க இன்று ஸ்டாலின் உண்ணாவிரதம்.!
லட்சக்ணக்கில் இறந்த பின்னர் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி.. நல்ல திட்டத்தை தடுக்க இன்று ஸ்டாலின் உண்ணாவிரதம்.!
சென்னையில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழர்களுக்கும், சிங்கள ராணுவத்திற்கு போர் உச்சகட்டமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது.
அப்போதைய தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். அவர் அமைதியாக போர் நடப்பதை தொலைக்காட்சிகளில் அமர்ந்து நொறுக்கு தீணிகளை சாப்பிட்டுக்கொண்டு ரசித்து வந்தார். தமிழ் பெண்களை சிங்கள ராணுவத்தினர் பாலியல் சித்ரவதை செய்து கொன்று குவித்ததை உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வந்தது. பெண் பத்திரிகையாளரை மிகவும் கொடுறமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்றதை உலகம் அறியும்.
இதனை அனைத்து நடக்காமல் கருணாநிதி தடுத்திருக்கலாம். மத்தியில் திமுக எம்.பியின் தயவில் ஆட்சி அமைய இருந்தது. அப்போது டெல்லிக்கு மகனுக்கு, பேரனுக்கு முக்கியமான பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று சோனியாகாந்தியிடம் சண்டையிட்டு வந்தார். இலங்கை தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. போர் இறுதியில் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்த பிரபாகரன் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது மகன் சிறு வயதிலேயே இலங்கை ராணுவத்தினர் ஈவு இரக்கமின்றி கொன்றனர்.
இதன் பின்னர் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கருணாநிதிக்கு எதிராக கோஷமிட்டனர். உருவபொம்மையை எரித்தனர். இதன் பின்னரே 2009ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதாக சென்னை மெரினா கடற்கரையில் கட்டில், மெத்தை, தலையணை வைத்துக்கொண்டு, ஏர் கூலர் உதவியுடன் ஓய்வு எடுத்து வந்தார்.
உண்ணாவிரதம் இருப்பதற்காக காலை 9.15 மணியளவில் கடற்கரைக்கு வந்தார். பின்னர் 12.30 மணியளவில் உண்ணாவிரதத்தை முடிப்பதாக ஊடகங்கள் தெரிவித்தது. அதாவது மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் கருணாநிதியிடம் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார். இலங்கை தமிழர்களை கொல்ல மாட்டார்கள், போரை நிறுத்த சொல்லிவிட்டேன் என கூறினார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது.