"கடவுள் இல்லை என்றால் இனி ஓட்டு விழாது" ஸ்டாலினுக்கு பதிலடி தந்த எல் முருகன்.!

#Lmurugan #mkstalin #dmk

Update: 2020-12-13 15:54 GMT

"ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது" என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ள கருத்திற்கு பதிலடியாக எல்.முருகன் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

நேற்று பேசிய ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது,  "ராமநாதபுரத்தில் குடிநீர் திட்டம் தி.மு.க ஆட்சியில் இருந்தபோதுதான் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க'வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது. ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க'வை வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். ஏழைகளை காக்க கூடியவர்கள்தான் உண்மையில் ஆன்மிகத்தை நேசிப்பவர்கள். ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க"என பேசினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "ஸ்டாலினுக்கு பெரிய பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் என பேசுகிறார். கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது" என தி.மு.கவின் திடீர் ஆன்மீக நிலைப்பாட்டை தோலுரித்துள்ளார்.

Similar News