தி.மு.க.,வைதான் மக்கள் நிராகரிக்கின்றனர்.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து.!

தி.மு.க.,வைதான் மக்கள் நிராகரிக்கின்றனர்.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து.!

Update: 2021-01-11 15:27 GMT

அதிமுகவை நிராகரிப்பதாக கூறிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோரை பொது மக்கள் நிராகரித்து வருகின்றனர் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து கூறியுள்ளார். 

திருவள்ளூரில் மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேர்தல் பிரசாரத்திற்கு அதிமுகவினர் செல்லும் இடமெல்லாம் பொது மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ஆனால், அதிமுகவை நிராகரிப்போம் என்று ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக கட்சியினர் செல்லும் இடமெல்லாம் மக்கள் துரத்தி வருகின்றனர். 

மேலும், உதயநிதி பிரசாரம் மற்றும் அவரது ஆபாச பேச்சுக்களை பார்த்து மக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். இதன் காரணமாக திமுகவினர் பலரும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக, தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
 

Similar News