எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மக்கள்தான் வாரிசு.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மக்கள்தான் வாரிசு.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. அவங்க இரண்டு பேருக்கும் மக்கள்தான் வாரிசு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் பனமரத்துப்பட்டி, வாணியம்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இதன் பின்னர் அவர் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. ஏழை எளிய மக்கள் பயன் பெறுவதற்காகவே மின் இணைப்பு திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. மக்களை சந்திப்பது பெரியதா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரியதா? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது இரண்டு பேருக்கும் மக்கள் தான் வாரிசு.
அம்மாவின் அரசு நேரடியாக மக்களிடம் சென்று பேசி வருகிறது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அம்மாவின் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. வீரபாண்டி பிரிவில் ரூ.45 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டந்தோறும் சென்று நேரடியாக ஆய்வுகூட்டம் நடத்தி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.