டார்ச் லைட்டுக்கு உயர்நீதிமன்ற கதவை தட்டும் மக்கள் நீதி மய்யம்.!

டார்ச் லைட்டுக்கு உயர்நீதிமன்ற கதவை தட்டும் மக்கள் நீதி மய்யம்.!

Update: 2020-12-19 11:24 GMT

பேட்டரி டார்ச் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நீதி மய்யத்துக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு அச்சின்னம் கிடைக்கவில்லை.

இதனால் கமல்ஹாசன் கடும் அதிருப்தியை வெளியிப்படுத்தினார். இந்நிலையில், தமிழகத்திலும் பேட்டரி சின்னம் கிடைப்பதற்காக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் மேல்முறையிடு செய் முடிவெடுத்து அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்காக, வழக்கறிஞர்கள் குழு டெல்லி சென்றது. தேர்தல் ஆணையத்திடம் அந்தக்குழு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், இன்று மக்கள் நீதிமய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தமிழகத்தில் ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
 

Similar News