பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. அ.தி.மு.க., பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. அ.தி.மு.க., பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.!

Update: 2021-01-06 11:55 GMT

பொள்ளாச்சி வழக்கில் கைதானதை தொடர்ந்து அதிமுக பிரமுகர் அருளானந்தத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இளம்பெண் ஒருவர், தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். கைதான 3 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி வழக்கில் கைதான அருளானந்தம் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News