ராஜஸ்தான் அமைச்சரவை மந்திரி பன்வர்லால் மேக்வால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர்.!

ராஜஸ்தான் அமைச்சரவை மந்திரி பன்வர்லால் மேக்வால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர்.!

Update: 2020-11-17 08:00 GMT

ராஜஸ்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் பன்வர்லால் மேக்வால் இருந்துள்ளார். இவர் நீண்டகால உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார் திடீரென்று திங்கள்கிழமை காலமானார். 71 வயதான காங்கிரஸ் தலைவரான இவர்க்கு மே மாதத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடலின் வலது புறம் முடங்கியது. மூத்த தலைவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருத்தம் தெரிவித்தார்.

"ராஜஸ்தான் அமைச்சரவை மந்திரி மாஸ்டர் பன்வர்லால் மேக்வால் ஜி மறைந்ததில் வருத்தம். அவர் ஒரு மூத்த தலைவராக இருந்தார். அவர் ராஜஸ்தானுக்கு சேவை செய்வதில் ஆர்வமாக இருந்தார். சோகமான இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்" என்று பிரதமர் மோடி அவர்கள் மேற்கண்டவாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்  செய்துள்ளார்.

"எனது மந்திரி சகா மாஸ்டர் பன்வர் லால் மேக்வால், நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் காலமானதில் ஆழ்ந்த வருத்தம். 1980 முதல் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல், கடவுள் அவர்களுக்கு பலம் அளிக்கட்டும். அவரது ஆத்மா ஆர்.ஐ.பி ஆகட்டும்" என்று முதல்வர் அசோக் கெஹ்லோட் ட்வீட் செய்துள்ளார். 

Similar News