மாற்றுத்திறனாளி பெண்ணின் குடும்பத்திற்கு உதவிய ரஜினிகாந்த்..!

மாற்றுத்திறனாளி பெண்ணின் குடும்பத்திற்கு உதவிய ரஜினிகாந்த்..!

Update: 2020-12-02 18:20 GMT

தனது குழந்தையின் படிப்பு செலவிற்காக உதவிக் கேட்டு ரஜினி வீட்டு வாசலில் காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். நடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து தனது ரசிகர் மன்றத்தின்  மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் குறித்து ரஜனிகாந்த என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அவரது வீடு முன் அவரது ரசிகர்கள், செய்தியாளர்கள் பலர் காத்திந்தனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் கௌரி ராமையா என்ற பெண் தனது குழந்தையில் கல்வி செலவுக்கு உதவி கேட்டு காத்திருந்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில், கொரோனா  ஊரடங்குக்கு பின்னர் எந்த ஒரு வேலையும் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறேன். எனது கடைசி மகன் 11வது வகுப்பு எனது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் செல்போன் வாங்குவதற்கு கையில் பணம் இல்லை, நான் பயணிப்பதற்கு அரசு கொடுத்த மாற்றுத்திறனாளி மூன்று சக்கர சைக்கிள் முற்றிலும் பழுதாகி விட்டது. அதனை பயன்படுத்தி எங்கும் காய்கறி வியாபாரம் செய்ய கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. என்னுடைய கணவருக்கு ஆஸ்துமா நோய் காரணமாக அவரால் வேலை செய்ய முடியவில்லை. அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்கு கூட பணம் இல்லை. இதனால் சென்னைக்கு வந்து அரசியல் தலைவர்களை சந்தித்து அவர்களிடம் உதவிகளைப் பெறலாம் என்பதற்காக வந்தேன்.


குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடமும் உதவி கேட்கலாம் எனக்கு உதவி கிடைத்தால் மூன்று சக்கரம் வாகனத்தை பயன்படுத்தி ஏதாவது வேலை செய்துக்கொள்வேன் என்றார். இதனை அறிந்த நடிகர் ரஜினி தனது உதவியாளர் மூலம் அவருக்கு நிதியுதவி அளித்துள்ளார். மேலும் அவர்களின் குடும்ப விவரங்களை பெற்றுக்கொண்டு பள்ளி மாணவர்களை படிக்க வைக்கிறேன் எனவும் உறுதி அளித்துள்ளார். அரசியல் வருவதற்கு முன்பாக ரஜினி உதவி செய்து வருவது தமிழக அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்தா பார்த்தால்தான் அனைவருக்கும் தெரியும்.

Similar News