ராசா, ராணி கதை எடுத்து விட்டா.. திமுகவின் மானம் தண்டவாளத்தில் ஏற்றிவிடுவேன்.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிரடி பேச்சு.!

ராசா, ராணி கதை எடுத்து விட்டா.. திமுகவின் மானம் தண்டவாளத்தில் ஏற்றிவிடுவேன்.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிரடி பேச்சு.!

Update: 2020-12-07 10:12 GMT

திமுக எம்.பி., ராஜா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடன் விவாதிக்க வரவேண்டும் என்று கூறினார். அது மட்டுமின்றி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி தவறான வார்த்தையால் பேசினார். இது அதிமுக தொண்டர்களை மட்டுமின்றி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களிடையே பெருள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், இதற்கு பதலடி கொடுக்கும் விதமாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியான பேட்டியால் திமுகவை அலறவைத்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது: அதிமுக தலைவர்களை பற்றி பேசுவதற்கு ராஜாவுக்கு என்ன அருகதை உள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிறை தண்டனை பெற்றவர்தான் ராஜா. அவரது ராசா, ராணி கதை எடுத்து விட்டா, திமுகவின் மானம் தண்டவாளம் ஏறிடும்.


மேலும், ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட கட்சிதான் திமுக. அவர்களுக்கு ஊழலை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. திமுகவில் உள்ள ராஜா வெளிநாட்டு காரில் சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது. இதை பற்றி ஸ்டாலின் வாய் திறப்பாரா என காட்டமாக பதில் அளித்தார்.


முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ராஜாவின் கழுத்தை பிடித்து திகார் ஜெயிலில் அடைத்தார்கள். அவர்ளுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளனர். காங்கிரசும், திமுகவும் களவாணி கட்சியினர் எனவும் கூறினார். இவரது பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Similar News