பவுரிங் மருத்துவமனையில் இருந்து விக்டோரியாவுக்கு மாற்றப்பட்ட சசிகலா.!

பவுரிங் மருத்துவமனையில் இருந்து விக்டோரியாவுக்கு மாற்றப்பட்ட சசிகலா.!

Update: 2021-01-21 15:13 GMT

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு நேற்று காலை திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே சற்று உடல்நலம் தேறியுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இதன் பின்னர் சிடி ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது மருத்துவமனையில் இருந்து சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்பட்டார். அப்போது தனது உறவினர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே கோஷங்கள் எழுப்ப ஆரம்பித்தனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு சசிகலா அருகாமையில் யாரும் நெருங்க முடியாதபடி பார்த்துக்கொண்டனர்.

Similar News