ஸ்டாலின் முதல்வர் கனவு ‘கனவாகவே’ இருக்கும்.. திகவின் மயக்க பிஸ்கட் புத்தகத்துக்கு ‘ஐபேக்’ எச்சரிக்கை.!

ஸ்டாலின் முதல்வர் கனவு ‘கனவாகவே’ இருக்கும்.. திகவின் மயக்க பிஸ்கட் புத்தகத்துக்கு ‘ஐபேக்’ எச்சரிக்கை.!

Update: 2020-12-15 08:03 GMT

‘மயக்க பிஸ்கட்’ தலைப்பில் தி.க., புத்தகம் தயார் செய்து வருகிறது. இந்த புத்தகத்தில் இந்துக்கள் பற்றி அவதூறான கருத்துகள் இடம்பெற்றுள்ளது என்று ஐபேக் டீம் திமுகவிடம் தகவல் ஒன்றை கூறியுள்ளது. இந்து மதத்தை சீண்டுவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், கந்தசஷ்டி கவசத்தையும், தமிழ் கடவுள் முருகனையும் இழிவுபடுத்தி, கறுப்பர் கூட்டம் என்ற, ‘யு டியூப்’ சேனலில் வீடியோ வெளியானது. இந்த வீடியோவுக்கு இந்து மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கறுப்பர் கூட்டத்தினரை குண்டர் சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர்.

கறுப்பர் கூட்டத்தில் கைதான ஒருவர் திமுக ஐடி விங்கில் பணியாற்றியவர் என தெரியவந்தது. எனவே அக்கூட்டத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது என்று பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், திருச்சியை சேர்ந்த தெய்வீக தமிழக சங்கத்தின் சார்பில், வீடு, வீடாக, துண்டு பிரசுரம் வழங்கி பாஜகவுக்கு ஆதரவாக, இந்து அமைப்பினர், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ‘தேசியம் காக்க தமிழகம் காக்க, 10 நிமிடம் தாருங்கள்’ என்ற தலைப்பில், துண்டு பிரசுரம் அச்சிட்டு அதனை கிராமங்கள் தோறும் வீடு, வீடா வழங்கப்பட்டு வருகின்றன. அந்த துண்டு பிரசுரத்தில்,

குழந்தைகளுக்கு நம் பாரம்பரியம் இந்து சமய பெருமைகளை சொல்லி வளர்ப்போம். பிரிவினைவாத, பயங்கரவாத சதிகளை முறியடிக்க குரல் கொடுப்போம்

இந்துக்களுக்கு, தேசத்திற்கு ஆபத்து ஏற்படும் போது, நாம் ஒவ்வொருவரும், குரல் கொடுத்து தீர்வு காண்போம். இந்துக்களை அவமதிக்கும் அரசியல் கட்சிகளுக்கு புரியும் மொழியில், இந்துக்களுக்காக செயல்படுவர்களுக்கே வாக்களிப்போம்.

தேசியம் காக்க, தமிழகம் காக்க ஒன்றுப்பட்டு செயல்படுவோம் என்ற, வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நூதன பிரசாரத்திற்கு எதிராக, திராவிடர் கழகம் சார்பில், தமிழ் மக்களே காவிகளை புரிந்து கொள்ளுங்கள். சிந்திக்க சில கேள்விகள். தேசியம் காக்க, தமிழினம் காக்க புறப்படுவோரே, பதில் கூறுங்கள். மயக்க பிஸ்கட்டுகள் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில், இந்து மத தர்மங்களை விமர்சித்து, 31 பக்கத்தில் புத்தகம் ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த புத்தகத்தை, இந்து அமைப்பினருக்கு போட்டியாக, திராவிட கழகத்தினர் வழங்க உள்ளனர்.

ஆனால், புத்தகத்தை இந்து மக்களிடம் கொடுத்து பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்தால், அது திமுக கூட்டணி வெற்றியை பாதிக்கும். இந்து மக்களின் ஓட்டுக்கள் அனைத்தும் சிதறும் வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த புத்தகத்தை வீடு, வீடாக வழங்க அனுமதிக்க கூடாது என திமுக தலைமைக்கு ‘ஐபேக்’ சார்பில் அறிக்கை தரப்பட்டுள்ளது. இதனால் திமுக உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. அடுத்த முறையும் நாம் ஆட்சி அதிகாரத்தில் நுழையாமல் இருப்பதற்கு திகவினர் முடிவெடுத்துவிட்டதாகவும், அந்த தலைமைக்கு கடுமையான எச்சரிக்கையும் செய்ததாக கூறப்படுகிறது.
 

Similar News