ஸ்டாலின் லண்டன் பயணம் மீண்டும் ரத்து.. ஏன் தெரியுமா.?

ஸ்டாலின் லண்டன் பயணம் மீண்டும் ரத்து.. ஏன் தெரியுமா.?

Update: 2020-12-27 16:36 GMT

உடல் ரீதியாக சில பிரச்னைகளுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் லண்டனில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பரிசோதனைக்காக அவர் லண்டன் போகணுமாம்.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற கொரோனா வைரஸ் பரவியபடியே இருந்ததால், அவரால் லண்டன் போக முடியவில்லலை என்று கூறப்படுகிறது.

இதனால் லண்டனில் உள்ள மருத்துவர்களிடம் போனில் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தார். சமீபத்துல கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி மயக்கமாகினார். இதனை தொடர்ந்து அவர் சில நாட்கள் ஓய்வில் இருந்தார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் ஆலோசனைபடி, தேர்தல் நெருங்குவதற்குள் லண்டன் போய் மருத்துவர்களை சந்திக்க ஸ்டாலின் முடிவு செய்திருந்தா. ஆனால் இப்போது இங்கிலாந்தில் மறுபடியும் வீரியம் மிக்க கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துட்டு வருகிறது. இதனால் இந்த முறையும் ஸ்டாலின் தனது லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

Similar News