கேள்வி கேட்ட பெண்.. பதில் சொல்ல முடியாமல் வெளியேற்றிய ஸ்டாலின்.. கோவையில் பரபரப்பு.!

கேள்வி கேட்ட பெண்.. பதில் சொல்ல முடியாமல் வெளியேற்றிய ஸ்டாலின்.. கோவையில் பரபரப்பு.!

Update: 2021-01-02 12:58 GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடியலை நோக்கி என்ற பிரச்சாரத்தை கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறார். அது போன்று கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட பெண்ணை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இன்று திமுக சார்பில் கிராம சபைக்கூட்டத்திற்கு அக்கட்சியின் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது ஒரு பெண் எழுந்து கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

அப்போது நீங்க அமைச்சர் வேலுமணி அனுப்பிய ஆள். எனவே உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. உடனே வெளியேற்றுங்கள் என பேசியுள்ளார். அந்த சமயத்தில் திமுக தொண்டர் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுக்க முயற்சி செய்தார். அப்பெண் அந்த நபரை நோக்கி எச்சரிக்கை விடுத்தார்.

ஒரு பெண் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்வது ஒரு தலைவரின் கடமை ஆகும். ஆனால் பதில் சொல்ல முடியாமல் கட்டாயப்படுத்தி வெளியேற்ற சொல்வது அவரின் அறியாமையை காண்பிக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Similar News