தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் தி.மு.க MLA - வழக்கம் போல் கண்டுகொள்ளாத திருமாவளவன்.!
தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் தி.மு.க MLA - வழக்கம் போல் கண்டுகொள்ளாத திருமாவளவன்.!
தமிழ்நாட்டில் ஜாதியை நாங்கள் ஒழித்து விட்டோம் என்று இணைய தி.மு.கவினர் அவ்வப்போது மார்தட்டி வந்தாலும், ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதும், நீ என்ன ஜாதி என்று வெளிப்படையாக தொண்டர்களிடம் கேட்பதும் என முரண்பாடுகளின் மொத்த உருவமாக தி.மு.க நிற்கும்.
தயாநிதிமாறன் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று இழிவுபடுத்திப் பேசிய போது கூட அதை தோழமையாக சுட்டிக் காட்டி விட்டு திருமாவளவன் ஒதுங்கிவிட்டார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கட்டப்பஞ்சாயத்தின் போது தி.மு.க எம்எல்ஏ, ஒருவரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதும், தலித் சமூகத்தை மறைமுகமாக இழிவுபடுத்திப் பேசுவதுமாகிய ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த தி.மு.க எம்எல்ஏ செங்குட்டுவன், இரு தரப்பினருக்கு இடையிலான நிலப் பிரச்சனை தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து நடத்திக்கொண்டிருந்தார். தனது கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கா விட்டால் கொலை செய்து விடுவேன் என்று ஒருவரை மிரட்டுவது வீடியோவில் தெரிகிறது.
கிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ.செங்குட்டுவன் கட்டப்பஞ்சாயத்து செய்து ஜாதி பெயரை சொல்லி கொலை மிரண்டல்#கட்டப்பஞ்சாயத்து_திமுக pic.twitter.com/LEzDyaFRPY
— ANNAPOORANI (@annapoorani_2) November 23, 2020
இந்த வீடியோவில் கிருஷ்ணகிரியின் தி.மு.க செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன், தமிழில் ஒருவரை கெட்ட வார்த்தைகளில் திட்டுவதையும், ஒருவரின் எலும்புகளை உடைத்து தூக்கில் தொங்க விட்டு விடுவேன் என்று மிரட்டுவதையும் காணலாம்.