இரண்டு துணை முதல்வர்கள்.. பா.ஜ.கவின் திட்டம் என்ன?
இரண்டு துணை முதல்வர்கள்.. பா.ஜ.கவின் திட்டம் என்ன?
அரசியலில் முக்கிய எதிர்க் கட்சியாக இருந்து ஆளுங்கட்சியாக மாறுவது ஓரளவு எளிது. ஒரு தேர்தல் போனால் அடுத்த தேர்தல்..ஆனால் ஆளும் கூட்டணியில் வெகு நாள் இருந்து, தனியாக நின்று வெற்றி பெறும் அளவு செல்வாக்குப் பெறுவது கடினம்.
பிஹாரில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. கூட்டணியில் JD(U) குறைவான இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி, அதன் தலைவர் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆனால் துணை முதலமைச்சர் சுஷில் மோடிக்கு பதிலாக வேறு இரண்டு துணை முதலமைச்சர்களை பா.ஜ.க அழைத்து வந்தது பல ஊகங்களுக்கு வழிவகுத்தது. ஏனெனில் துணை முதலமைச்சர் தர்க்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகிய இருவருமே தீவிரமான RSS பின்னணியிலிருந்து வந்தவர்கள். நிதீஷ் குமாருடன் ஒரு நல்ல பணி நிமித்தமான உறவைக் கொண்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் ஜே பி நட்டா தலைமையிலான பா.ஜ.க, பிஹார் உள்ளூர் அரசியலில் மெதுவாக ஒரு வலுவான போட்டியாளராகவும், வருங்காலத்தில் தனியே நின்று வெற்றி பெறும் அளவிற்கு வலிமையை வளர்த்துக் கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் எனவும் யூகிக்கப்படுகிறது.
ரேணு தேவி, பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் அரசியல்வாதி. அவர் நோனியா சமூகத்தைச் சேர்ந்தவர். இது மிகவும் பின்தங்கிய சமூகங்களில் (EBC) ஒன்றாக கருதப்படுகிறது. இச்சமூகம் இதுவரை நிதிஷ்குமாரிற்கு ஆதரவாக வாக்களித்து வருகிறது.
ரேணு தேவி, தேர்தலில் பெட்டியா தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். அவர் இதற்கு முன்பு நான்கு தடவை பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000, 2010, 2020 மற்றும் 2005இல் இரண்டு முறை. 2015 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.