ஒரே நாளில் கோவையில் முகாமிடும் இரண்டு கட்சி தலைவர்கள்.!
ஒரே நாளில் கோவையில் முகாமிடும் இரண்டு கட்சி தலைவர்கள்.!
தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வருகிறது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். அவர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2 நாட்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமான மூலமாக கோவைக்கு செல்கிறார் இன்று இரவு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
இதனையடுத்து நாளை காலை 7.10 மணியளவில் கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதே போன்று காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கு அந்த கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நாளை காலை விமானம் மூலம் கோவைக்கு வருகிறார்.
ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்கிறார். ஒரே நாளில் இரண்டு தலைவர்கள் கோவையில் முகாமிடுவது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.