ஐ.டி.க்கு நம்ம கட்சியிலிருந்து தகவல் போது.. கல்நெஞ்சம் படைத்தவர்கள்.. மா.செ. கூட்டத்தில் புலம்பித்தள்ளிய துரைமுருகன்.!

ஐ.டி.க்கு நம்ம கட்சியிலிருந்து தகவல் போது.. கல்நெஞ்சம் படைத்தவர்கள்.. மா.செ. கூட்டத்தில் புலம்பித்தள்ளிய துரைமுருகன்.!

Update: 2020-12-20 15:04 GMT

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கொரோனா தொற்றுக்கு இடையிலும் வேகமாக வேலை பார்த்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவை தொடர்ந்து தற்போது திமுகவும் களத்தில் இறங்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு தேர்தல் முடியும்வரை யாரிடமும் பகைமை காட்ட மாட்டேன். யாரிடத்திலும் போட்டு கொடுக்கமாட்டேன் என ஒரு சபதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

நம் கட்சியை சேர்ந்த கல்நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளம், வருமான வரித்துறைக்கு நம்மைப்பற்றி செய்தி சொல்லும் அளவிற்கு நன்றி கெட்டு மறந்து போய் இருக்கிறது. 70வது ஆண்டுகளாக கட்சிக்காக வாழ்ந்த எனக்கு இது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News