புதுச்சேரியின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஏம்பலம் செல்வதை நேரில் வாழ்த்திய Dr. L. முருகன்!

Update: 2021-06-16 12:37 GMT

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதன் அடிப்படையில் கடந்த மே 7 ஆம் தேதி என்.ஆர். காங்கிரஸை சேர்ந்த ரங்கசாமி புதுச்சேரியின் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். இந்த நிலையில் நேற்று புதுச்சேரியின் சபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க வை சேந்த ஏம்பலம் செல்வம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததை அடுத்து, இன்று அவர் புதுச்சேரியின் சபாநாயகராக பொறுபேற்றார்.


ஏம்பலம் செல்வம் புதுச்சேரியின் சபாநாயகராக பொறுபேற்றதை அடுத்து பா.ஜ.க வை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் பிற கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் Dr. L. முருகன்,  ஏம்பலம் செல்வதை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்று புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள திரு. ஏம்பலம் செல்வம்  அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்." என்று ஏம்பலம் செல்வதை குறிப்பிட்டு அவர் ட்வீட் செய்தார்.

Tags:    

Similar News