அதிருப்தி ரஜினி ரசிகர்கள் மூலம் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க திட்டம்.!

அதிருப்தி ரஜினி ரசிகர்கள் மூலம் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க திட்டம்.!

Update: 2020-12-11 08:39 GMT

திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை பற்றிய அறிவிப்பால் யாருக்கு அதிக பாதகம் இருக்கிறதோ இல்லையோ  அவரின் அரசியல் அறிவிப்பை இரவு, பகல் பாராது யோசிக்கும் ஒரே அரசியல் கட்சி தமிழகத்தில் தி.மு.க மட்டுமே.

காரணம் கருணாநிதி அவர்கள் இறந்த பின்பு அவரது மகன் என்ன அடையாளத்துடன் மட்டுமே தி.மு.க தலைமையை கைப்பற்றிய ஸ்டாலின் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெறுப்பு என்ற பிரச்சாரத்தை மக்கள் மனதில் எரியவிட்டு அதன் மூலம் வாக்குகளை தனக்கு சாதகமாக்கி கொண்டதைபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க'வின் மேல் மக்களுக்கு வெறுப்பை வரவழைத்து அதன் காரணமாக விளையும் அதிருப்தி வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்து விடலாம் என நினைத்த தி.மு.க'விற்கு திரு.ரஜினிகாந்த் அவர்களின் இந்த அரசியல் வருகை பற்றிய அறிவிப்பு இடி இறங்கியது போல் ஆகிவிட்டது.

இந்த நிலையில் தற்பொழுது திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகையை பற்றி தவறான எண்ணத்தை மக்களுக்கு அவரது ரசிகர்கள் மூலம் விதைக்கலாம் என்ற அரசியல் சூழ்ச்சியுடன் தி.மு.க'வும் அதன் ஆதரவு ஊடகங்களும் இறக்கிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது திரு.ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக  விலக்கப்பட்டவர்கள், விலகியவர்களை வைத்து "திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் அறிவிப்பு எடுபடாது" என்பது போன்ற கருத்தை மக்கள் மத்தியில் ரஜினி ரசிகர்கள் அதிருப்தி என்பது போன்ற அடைமொழியுடன் பரப்ப தி.மு.க ஆதரவு ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் திட்டமிட்டுள்ளன என்பதும்.

அதற்காக அதிருப்தி ரசிகர்களை பட்டியலிட்டு அவர்களை பேச வைக்க முயற்சி செய்கின்றன என்ற தகவலும் கிடைத்துள்ளது. எப்படியாவது மக்கள் மத்தியில் திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை எடுபடாது என்ற எண்ணத்தை அதிருப்தி  ரஜினி ரசிகர்கள் மூலம் விதைக்க தி.மு.க திட்டமிட்டுளது.

Similar News