மு.க.ஸ்டாலினுக்கு இந்துக்கள் வாக்குகள் இனிக்கும் - தீபாவளி வாழ்த்து கூற வாய் கசக்குமா?
மு.க.ஸ்டாலினுக்கு இந்துக்கள் வாக்குகள் இனிக்கும் - தீபாவளி வாழ்த்து கூற வாய் கசக்குமா?
பண்டிகைகள் பல ஆத்திகம் முறைப்படி பல இதிகாச வரலாறுகள், ஆண்டவனின் அவதார கதைகளால் காரணம் கூறப்பட்டு கொண்டாடப்பட்டாலும் இன்றைய வாழ்வில் அது மக்களின் மன இறுக்கத்தை போக்கும் ஓர் முறையாகும். தினமும் உழைத்து பிழைப்போர்க்கும், ஒரே மாதிரியான வாழ்க்கை வாழும் விளிம்பு நிலை மனிதர்கள் முதல் பணம் படைத்தவர்கள் வரை பண்டிகை தினங்கள் ஒரு மாற்றத்தை தரும். இதிகாச வரலாறுகள் மதிக்காவிட்டாலும் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற பண்டிகைகளை மக்களின் உணர்வை மதித்தாவது கொண்டாட வேண்டும்.
அது போலதான் அரசியல் தலைவர்களும், தங்களையும் தங்கள் வாழ்வையும் மக்களுக்கு அர்பணிப்பதாக காட்டி கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டால் இதுபோன்ற பண்டிகைகளில் மக்களுடன் நின்று கொண்டாட வேண்டும் அல்லது குறைந்த பட்சம் பெயருக்காவது தனது வாழ்த்தை பதிவு செய்ய வேண்டும். தீபாவளி இந்து மக்கள் பண்டிகை ஆனால் இந்து மக்களை தன் வாழ்நாள் எதிரியாக பார்க்கும் தி.மு.க-வோ ஓர் வாழ்த்து செய்தியை கூட கூற மனமின்றி இந்துக்கள் மக்கள் மீதான வெறுப்பை எரிமலையாய் கக்குகிறது.
சிலர் அறிவாளியாக கேட்பதாக நினைத்துக்கொண்டு கேட்கலாம் ஏன் வாழ்த்து சொன்னால் தான் பண்டிகையா என! ஆமாம், உங்கள் அறிவார்ந்த கருத்தை இருகரம் கூப்பி ஏற்கிறோம் வாழ்த்து சொன்னால் மட்டும் பண்டிகை அல்ல. ஆனால் இதே வார்த்தை போன ரம்சான் பண்டிகைக்கு வரவில்லையே ஏன்? வரும் டிசம்பர் மாதத்தில் இதே வார்த்தை கிருஸ்துமஸ் பண்டிகைக்கு உங்கள் வாயில் இருந்து வருமா? இந்துக்கள் ஓட்டு மட்டும் வேணும் அவர்கள் பண்டிகைக்கு வாழ்த்து வேண்டாமா? இந்துக்கள் ஓட்டு மட்டும் தி.மு.க'விற்கு இனிக்குமா?