சாராய ஆலைக்காக நிலத்தடி நீரை உறிஞ்சும் தி.மு.க - விவசாயிகள் ஆதரவு நாடகமா? - மக்கள் சரமாரி கேள்வி!
சாராய ஆலைக்காக நிலத்தடி நீரை உறிஞ்சும் தி.மு.க - விவசாயிகள் ஆதரவு நாடகமா? - மக்கள் சரமாரி கேள்வி!
"கறுப்புக்கொடிகள் உயரட்டும்!
தமிழகமே கறுப்புக்கடல் ஆகட்டும்!
டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்!
விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும்!"
என தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பேச்சை கேட்டு வேலூரில் துரைமுருகன், மயிலாடுதுறையில் டி.ஆர்.பாலு, திருச்சியில் கே.என்.நேரு, திண்டுக்கல் பகுதியில் ஐ.பெரியசாமி, திருவண்ணாமலையில் பொன்முடி, ஈரோட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன், நீலகிரியில் ஆ.ராசா, நாமக்கல்லில் அந்தியூர் செல்வராஜ் என அனைவரும் இறுதியாக சேலத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் என கூடியுள்ளனர்.
மத்திய அரசின் வேளான் விவசாய மசோதாவை பற்றிய விமர்சனங்கள், விளக்கங்கள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இந்த வேளாண் திட்டங்களை எதிர்க்கிறேன் விவசாயிகளை ஆதரிக்கிறேன் என்று கூறி போராட்டம் செய்ய தி.மு.க-விற்கு தகுதி இருக்கிறதா என்று மக்கள் யோசிக்கின்றனர்.
இப்படியான கேள்விகளை விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க-வின் செயல்பாடுகளை மீத்தேன் கையெழுத்திட்டது முதல் காவிரி பிரச்சினையை அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் பேச்சை கேட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்தது வரை எடுத்து பார்த்தால் தி.மு.க-வின் கபட நாடகம் புரியும். இவற்றில் முக்கியமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பதவி ஏற்றது முதல் தி.மு.க-வின் விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன், காவிரி போன்ற பிரச்சனைகளை சரிவர கையாண்டு சரி செய்து வருகிறது.