மீண்டும் ஆளுங்கட்சியே ஆட்சி அமைக்கும்.. இணையத்தில் வைரலாகும் குரு பெயர்ச்சி.!

மீண்டும் ஆளுங்கட்சியே ஆட்சி அமைக்கும்.. இணையத்தில் வைரலாகும் குரு பெயர்ச்சி.!

Update: 2020-11-17 06:42 GMT

குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு களத்திர குருவாக ஏழாம் வீட்டில் அமரப்போகிறார் குரு பகவான்.

வாக்கியப்பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் ஐப்பசி 30, நவம்பர் 15ஆம் தேதி (நேற்று) குரு பெயர்ச்சி நிகழ்ந்தது. திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் நாள், நவம்பர் 20ம் தேதி நிகழப்போகிறது. கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் மன அழுத்தங்கள் முடிவுக்கு வரும் சுகமும் சந்தோஷங்களும் அதிகரிக்கப் போகிறது.

குரு தனுசு ராசியில் ஆறாம் இடத்தில் கேது உடன் இருந்தவரை ஒரு சில கடன் பிரச்சினைகள், ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள், அலுவலகப் பணிகளில் ஒரு சில இடர்பாடுகள், தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இல்லாத நிலை, குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை பிரச்சினைகள் வந்து மருத்துவமனைக்கு போய் வந்தீர்கள். இனி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

குரு பெயர்ச்சிக்குப் பிறகு புதிய வேலைகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திற்கு வெளியூர் இடமாற்றம் ஏற்படும். திடீர் பதவிகள் தேடி வரும் சிலருக்கு புரமோசன் வரும். இடமாற்றம் பதவி மாற்றம் தேடி வரும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் தேடி வரப்போகிறது. தாமதப்பட்டுக் கொண்டிருந்த தொழில் ஒப்பந்தங்கள் இப்போது கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து தொழில் செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்நிலையில், குரு பெயர்ச்சி பற்றி இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் இறங்கி போராடுவார்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான எண்ணங்கள் அதிகரிக்கும். அதற்கு கீழே, ஆனாலும் தேர்தல் முடிவுகள் ஆள்பவர்களுக்கே சாதகமாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

திமுகவை பொறுத்தவரையில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். எனவே இந்த தடவையும் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு என்பது கிடையாது என்று குரு பெயர்ச்சி மூலம் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

Similar News