மீன்பிடி வலையில் சிக்கிய இரண்டடி உயர சந்திரபகவான் சிலை!

Update: 2022-04-24 13:32 GMT

காஞ்சிபுரம் : வாலாஜாபாத் அருகே ஆற்றிலிருந்து இரண்டடி உயர சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரம் பகுதி பாலாற்றில் தடுப்பணை ஒன்றுள்ளது. அந்த ஆற்றுப்  பகுதியில் பொதுமக்கள் வலைகளை கொண்டு மீன் பிடித்தனர். வீசப்பட்ட வலையில் இரண்டடி உயர சாமி சிலை ஒன்று சிக்கிக் கொண்டது. இதனை உணர்ந்த மீன் பிடித்தவர்கள், அச்சிலையை கரைக்கு மீட்டெடுத்தனர். அப்பொழுது  பார்த்த போது அது 2 அடி உயர சந்திரபகவான் சிலை என்பது  தெரியவந்தது.




 

குதிரை வாகனத்துடன் கைகளில் தாமரைப் பூக்களை  கொண்ட  சந்திர பகவானின் சிலையை, தாலுக்கா அலுவலகத்தில் பொது மக்கள்  ஒப்படைத்தனர். இச்சிலையை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Thanthi TV

Tags:    

Similar News