ஸ்ரீரங்கம் கோபுர சுவர் இடிந்த விவகாரம்.. ஆட்சியாளர்களுக்கு ஆபத்தா.. பரபரப்பு உண்மை..

Update: 2023-08-14 12:35 GMT

108 வைஷ்ணவ தளங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது தான். ஸ்ரீரங்கம் குறிப்பாக பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோவில் சுமார் 7 திருசுற்றுகள் மற்றும் 21 கோபுரங்களுடன் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் கிழக்கு வாசல் நுழைவு கோபுரம், கீழச்சித்திரை வீதியை இணைக்கும் சாலையில் உள்ளது. இந்த கோபுரம் எட்டு நிலைகளைக் கொண்டது. இந்த கோபுரத்தின் கீழ் இருந்து ஒன்று மற்றும் இரண்டாவது நிலைகளில் உள்ள பக்க சுவற்றில் ஏற்கனவே சிறிய விரிசல் ஏற்பட்டது.


இதனால் கோபுரத்திற்கு செய்த ஏற்படலாம் மேலும் இடிந்து விழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒரு கட்டைகளை மட்டுமே நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். கடந்த 25 ஆம் தேதி கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை பக்க சுவற்றில் மேற்புற சிமெண்ட் பெயர்ந்து விழுந்தது. சிறிய பாகங்கள் கீழே விழுந்தன, இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று கிழக்கு கோபுரத்தின் முதல் நிலையின் பக்க சுவர் இடிந்து விழுந்தது.


மேலும் இப்படி நடந்தது தொடர்பாக ராஜமன்னார்குடி செண்டலங்கார ஜீயர் மடத்தின் மடாதிபதி ஸ்ரீசெண்டலங்கார செண்பகமன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் இது பற்றி அவர் கூறும் பொழுது, ‘‘சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக அரசு தலையிட்டது. இந்து கோயில்களின் மீது தாங்கள் கைவலித்தால் நடக்கக் கூடாத விபத்துக்கள் ஏற்படும் என்று நாங்கள் முன்னே எச்சரித்து இருந்தோம். அதன் பாதிப்புகளை தற்போது பார்த்து வருகிறோம். தற்போது அமைச்சர்களின் மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தர்மத்துக்கு விரோதமாக செய்யும் செயல்களுக்கு உரிய எதிர்வினைகள், பாதிப்பு இருக்கும். பொதுவாக கோயில் கோபுரம் இடிந்தாலே அது அரசனுக்கு, அரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்வார்கள். கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது நல்லதல்ல. தவறு செய்பவர்கள் இனியாவது தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News