நாகையில் அதிர்ச்சி: அரசுப் பள்ளி விடுதியில் சாப்பிட்ட 50 மாணவிகள் வாந்தி, மயக்கம்!

Update: 2022-07-28 11:47 GMT

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு நிதியுதவியுடன் செயல்படும் பள்ளியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு மேல் வாந்தி, மயக்கம் போட்டுள்ள சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம், வேதாரண்யத்தில் அரசு நிதியுதவியுடன் செயல்படும் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை உணவுச சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட விடுதி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவிகள் அனைவரும் வழக்கம் போல இன்று உணவு சாப்பிட்டபோது 50க்கும் அதிகமான மாணவிகள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News